ஞாயிறு, 6 மே, 2012

வெற்றி நடைபோட்ட மரவள்ளி கிழங்கு தான நிகழ்வு

-->

வெற்றி நடைபோட்ட மரவள்ளி கிழங்கு தான நிகழ்வு

--> கிழக்குபல்கலைக்கழக  திருகோணமலைவளாகமாணவர்கள் ஏற்பாடு செய்த தானநிகழ்வு ஒன்று 2012-05-05 அன்று வெகுவிமர்சையாக இடம்பெற்றது. வளாகமுதல்வரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பலமுக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். குறிப்பாக வளாகத்தின் மூத்த விரிவுரையாளர் திரு. ரகுராம் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துசிறப்பித்தமைவிசேடஅம்சமாகும்.

திருகோணமலை வளாக பௌத்த மாணவர்சங்கத்தின் பூரண ஒத்துழைப்பில் இடம் பெற்ற இந்நிகழ்விற்கு இன மத பேதமின்றி சகலமாணவர்களும் தமது ஒத்துழைப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.






புத்தபெருமானின் ஜனனத்தையும், பிரிவையும்  எடுத்துஉணர்த்தும் வெசாக் புனித நிகழ்வில் இவ்வாரான தான நிகழ்வுகள் நாடு தழூவிய ரீதியில் எங்கும் பரவலாக நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த வகையிலேயே திருகோணமலை வளாக மாணவர்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக