திங்கள், 30 செப்டம்பர், 2013

இன்று சர்வதேச சிறுவர் தினம்






குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சிறுவர் தினம் ஐக்கிய நாடுகள் அவையினால்(unicef) 1954 ஆம் ஆண்டு  பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையில் இன்றைய தினம் இது (ஒக்டோபர்  1 ஆம் திகதி)  கொண்டாடப்படுகிறது.  எனினும் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு தினங்களில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.


அதோடு இன்று உலக முதியோர் தினமும் கொண்டாடப்படுகிறது.


உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் இந்த நாளிலே நினைவுகூறப்படும். ஏனெனில் சிறுவர் துஷ்பிரயோகம் உலகமெங்கிலும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதனை இல்லாமல் ஒழிக்க பல நாடுகள் பல சட்டங்களை கொண்டுவந்தாலும் இது ஓய்ந்த பாடில்லை. பல காரியங்கள் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுவதால் பிற்காலத்தில் அவர்கள் ஒரு வன்முறையாளர்களாக வருவதற்கான சாத்தியமே உண்டு.


சிறுவர்களின் அடிப்படை உரிமையான கல்வியை அவர்கள் பெற்றுக் கொள்ளவேண்டும். பல சிறார்கள் இன்றைய நாளை சந்தோஷமாக கொண்டாடினாலும், நாம் அறியாத பல சிறு உள்ளங்கள் வேதனையிலும், கஷ்டத்திலும், சித்திரவதைகளிலும் தங்கள் காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான சிறுவர்களை நாம் இன்றைய நாளில் நினைத்துப் பார்க்க வேண்டும். இதற்காக நாம் அவர்களுக்காக பிரார்த்திப்பது நம் கடமையாக இருக்கின்றது.    


சர்வதேச சிறுவர் தினம் - June 1
பொதுவான உலக சிறுவர் தினம் - November 20

                                                  

எதிர்கால உலகின் தலைவர்களாகவும் இந்த உலகை காப்பதற்கு தயாராகும் பாதுகாவலர்களாகவும் இருப்பவர்கள் சிறுவர்கள். இளமையில் கல் சிலையில் எழுத்து எனும் வாக்கிற்கமைய சிறுவயதிலேயே சிறுவர்கள் வாழும் சூழல் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகிறது. அதற்கமைய உலகளாவியரீதியில் ஏற்படுகின்ற யுத்தங்கள் உள்நாட்டு பிரச்சினைகள் என்பன அதிகளவில் நேரடியாக சிறுவர்களேயே பாதிக்கிறது.


மேலும் சமூகத்திலுள்ள சில விசமிகளின் செயற்பாடுகளால் சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்  எனும் நோக்கோடு அவர்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 1 ம் திகதி சர்வதேச சிறுவர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.


சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களின் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கென ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1989ம் ஆண்டு முதல் சர்வதேச சிறுவர் தினத்தை பிரகடனப்படுத்தியது. எனினும் கடந்த 1924 ம் ஆண்டிலேயே சிறுவர்கள் முதன் முதலில் சிறுவர் உரிமைகள் தொடர்பிலான கொள்ளை வெளியிடப்பட்டது. அதன்பின்னர் கடந்த 1959 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் சிறுவர்களுக்கான சகல உரிமைகள் தொடர்பான தெளிவான கொள்கை பிரகடனம் வெளியிடப்பட்டது.


இந்நிலையிலேயே கடந்த 1979ம் ஆண்டு உலக சிறுவர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய கடந்த 1989 ம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் சிறுவர் உரிமைகள் தொடர்பான கொள்ளை பிரகடனத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது.


இதனிடையே கடந்த 1954 எம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் சர்வேதச சிறுவர் தினத்தை அமுல்படுத்தும் பொறுப்பு யுனிசெப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கமைய யுனிசெப், யுனெஸ்கோ மற்றும் சேவ் த சைல்ட போன்ற அமைப்புக்கள் என பல்வேறு செயற்திட்டங்களை முன்வைத்து செயற்பட்டுவருகிற்னறன. 

                                                  

18 வயதிக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சாசனம் வரையறை செய்துள்ளது.

•    வாழ்வதற்கும் முன்னேற்றுவதற்குமான உரிமை

•    பிறப்பின் போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக்கொள்ளும் உரிமை..

•    பெற்றோரை தெரிந்துகொண்டு அவர்களது பாதுகாப்பை  பெற்றுக் கொள்வதற்கான உரிமை

•    பெற்றோரிடமிருந்து  தம்மை       தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை..

•    கருத்தை வெளிப்படுத்தும் உரிமை…

•    சிந்திப்பதற்கும் மனச்சாட்சிப் படி நடப்பதற்கும் சமயம்       ஒன்றை       பின்பற்றுவதற்குமான உரிமை…

•    பொருளாதார சுரண்டல்களிலிருந்து  பாதுகாத்துக்கொள்ளும் உரிமை..

•    பாலியல் வல்லுறவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும்        உரிமை

•    சித்திரவதைகள், தண்டனைகளிலிருந்து தவிரித்துக்        கொள்ளும் உரிமை…

•    சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை

என சிறுவர்களுக்கு  பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் உலகளாவிய ரீதியில் இவற்றில் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படுகிறதா என்பது. கேள்விக்குறியான விடயம். இதனிடையே சிறுவர்கள் உடல் ரீதியான துஷ்பிரயோகம் உளவியல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகம் உணர்வு ரீதியான துஷ்பியோகம் புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகமென பலவழிகளில் அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். 

உலகில் வாழ்கின்ற மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களாவர். இவ்வாறு எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் இருக்கும் சிறுவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுகின்றனர்.  ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிவித்தலின் படி ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சிறுவர்கள் யுத்தத்தால் வழங்கப்படுகின்றனர். மேலும் 2 இலட்சத்து 50 ஆயிரத்குக்பும் அதிகமான சிறுவர்கள் யுத்தங்களில் போர்வீரர்களா செயற்பட்டு வருகின்றனர்.


மேலும் 12 மில்லியனுக்கும் அதிமான சிறுவர்கள் பல்வேறு காரணங்களினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு நிர்க்கதிக்குள்ளான சிறுவர்கள் தவறான பாiயி;ல் சென்று பல்வே குற்றச்செயல்களில் ஈடுபடுத்துவதற்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. 


இந்நிலையில் ஒவ்வொரு நாடுகளும் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் பாதுகாக்க வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் அதற்கென பல்வேறு  நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. எனினும் இன்று உலகில் பல்வேறு நாடுகளில் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுதல் , பாலியல் துஷ்பிரயோகம், கல்வியைத் தடுத்தல் , சிறுவர்களை கடத்துதல் போன்ற பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.


இந்நிலையில் எமது நாட்டில் 14 வயதிற்கீழுள்ள சிறுவர்களை வேலைக்கமர்த்துதலுக்கு எதிராக பல சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலங்கையில் கட்டாயக்கல்வி அமுல்படுத்தப்பட்டு அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் பாதுகாக்க வேண்டியவர்கள் என்பதன் காரணமாக அவர்களுக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.



உலகளாவிய ரீதியில் இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்களாக கருதப்படு வேண்டிய நிலையில் அவர்கள் தமது வாழ்க்கையில் பெரும் சவால்களை எதிர்நோக்கியள்ளனர். இவ்வாறு சிறுவர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு ஒவ்வொரு சமூகமும் பொறுப்புக் கூறவேண்டிய கட்டாயத்திலிருக்கிறது.


இந்த பூமியில் வாழ்கின்ற மனித இனமான நாம் எதிர்காலத்திலும் நல்லதொரு உலகை கட்டியெழுப்ப வாய்ப்பளிக்க வேண்டியது கட்டாயமல்லவா???? சிறுவர்களுக்கெதிரான நடவடிக்கைககளை தடுத்து அவர்களை பாதுகாத்து நாளைய நல்ல உலகத்திற்கு இன்றே வழிவகுப்போம்……இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்…

                                              

புதன், 25 செப்டம்பர், 2013

ஊடகம் என்ன செய்கிறது?




ஊடகம் என்றால் என்ன?

பொதுவாக ஊடகம் என்றால் கடத்துவது, காவுவது என்று தமிழில் அர்த்தம் கொள்ளப்படுகிறது.

ஒரு செப்புக்கம்பி ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு மின்சாரத்தை கடத்திச் செல்லும் போது அது அங்கே ஒரு ஊடகமாகச் செயற்படுகிறது.
அதே போல ஒருவர் பேசும்பேச்சை,மற்றவர் கேட்பதற்கு அதை ஒலி அலைகளாகச் சுமந்து செல்லும் காற்று ஊடகமாகச் செயற்படுகிறது.
ஊடகவியல் என்கிறபோது அது மனிதர்களுக்கிடையி;ல் கருத்துக்களை தகவல்களை காவிச் செல்கின்ற -பரப்புகின்ற வேலையைச் செய்கின்ற தொடர்பாடல் சம்மந்தப்பட்ட துறையைக் குறிக்கிறது என்று சாதாரணமாகச் சொல்லலாம்.

குறிப்பாகச் சொல்வதானால் கருத்தியலை கட்டமைப்பது,மனிதர்களினதும் சமுகத்தினதும் இருப்பை தீர்மானிப்பது, சந்தைப் பொருளாதாரத்தின் இருப்பை தீர்மானிப்பது,அரசியல் தத்துவம் விஞ்ஞானம் சட்டம் மருத்துவம் பொறியியல் என்று பல்துறை சார்ந்த விடயங்களில் தீர்மானகரமான சக்தியாக விளங்குவது என்று ஊடகவியலில் சர்வ வியாபகத் தன்மையை விளக்கலாம்.

ஊடகவியலின் செயற்பாடு

முதல்கட்டமாக ஊடகவிலின்; செயற்பாடுகளை தகவல் தெரிவித்தல், அறிக்கையிடுதல், பிரதிபலிப்பை உருவாக்குதல் என்கின்ற மூன்று வரையறைகளுக்குள் அடக்கலாம்.

தகவல் தெரிவித்தல்

கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்கின்ற பணி தான் ஒரு ஊடகத்தின் முதல் பணியாகும்.கருத்து என்பது இதழியலில் செய்தி, கட்டுரை, விவாதம், விமர்சனம், சிறுகதை, தொடர்கதை, நாவல், கவிதை, பாடல் என்று பல்வேறு வடிவங்களில் மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகிறது.
ஓலி ஒளி ஊடகங்களில் இவற்றுடன் கலந்துரையாடல் பாடல் நாடகம் விவரணச் சித்திரம் குறும் படம் ஆவணப்படம் சினிமா என்று இந்த வடிவம் இன்னும் விரிவுபெறுகிறது. ஒரு விளம்பரமாக அறிவித்தலாகக் கூட ஒரு கருத்து மக்களிடம் எடுத்துச் செல்லப்படலாம்.

கருத்து ஊடகங்களுடாக மக்களிடம் எடுத்துச் செல்லப் படுகின்ற போது முதலில் தகவல் தெரிவித்தல் என்ற பணி அங்கு நடைபெறுகிறது.

அறிக்கையிடுதல்

அறிக்கையிடுதல் என்பது ஊடகவியலில் மிக முக்கியமான ஒரு விடயமாகும். ஒரு கருத்தை கட்டமைத்து, அதை மக்கள் நம்புகின்ற விதத்தில், அவர்கள் விருப்பத்தக்கவகையில் அவர்களுடைய அறிவுத் தளத்தை நோக்கி நகர்த்துவதை ஊடகவியலில் அறிக்கையிடுதல் என்று சொல்லலாம்.

அதாவது ஒரு மனிதனின் சிந்தனைத் தளத்தில் ஊடுருவி அவன் எதைச் செய்ய வேண்டும், எதைச் சார்ந்திருக்க வேண்டும், எதைச் சாப்பிட வேண்டும் எதை உடுக்கவேண்டும், எதைக் குடிக்கவேண்டும், எதைப் படிக்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்ற அவனது அனைத்துச் செயற்பாடுகளையும் அவனையறியாமலோ அல்லது அவன் அறியும் படியாகவோ புறநிலையில் இருந்து இயக்குகின்ற தீர்மானகரமான சக்தியாக ஊடகவியல் விளங்குதற்கு இந்த அறிக்ககையிடுதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

உதாரணமாக நமது நாட்டிலே உள்ளுரில் தயாரிக்கப்படுகின்ற ஒரு குளிர் பானம், தரமும் சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்ததாக இருந்தாலும், சர்வதேச பிரபல்யம் வாய்ந்த குளிர் பானங்களுடன் சந்தையில் அதனால் போட்டிபோட முடிவதில்லை.

இதற்கு பொருளாதார ரீதியாக பலகாரணங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அவை எல்லாவற்றiயும் விட , உள்ளுர் குளிர்பானத்தைவிட சர்வதேசப் புகழ்பெற்ற குளிர் பானந்தான் சிறந்தது, அவற்றை மற்றவர்களுக்கு முன்பாக குடிப்பதே கௌரவத்துக்குரியது என்று நுகர்வேருடைய மனங்களிலே கட்டமைக்கப்பட்டிருக்கின்ற பிரமை முக்கியமானதாகும்.

இந்தப் பிரமை ஊடகங்களால் தான் கட்டமைக்கப்படுகிறது. இதைக் கட்டமைப்பதற்காக ஊடகவியலில் கையாளப்படும் முறைதான் அறிக்கையிடுதல் எனப்படுகிறது.

பொதுவாக அறிக்கையிடுதலில் தகவல் தெரிவித்தல், ஓப்பீட்டுக் குள்ளாக்கல், அம்பலப்படுத்தல், நம்பிக்கையூட்டல் என்கின்ற வழிமுறைகள் கையாளப்படுகின்றன.

உதாரணமாக சர்வதேச சந்தையில் இடம் பிடித்திருக்கும் ஒரு பிரபலமான நிறுவனத்தின் தயாரிப்பான ஒரு செருப்பு, அல்லது சப்பாத்து முதன் முதலாக ஒரு நாட்டின் உள்@ர் சந்தைக்கு வருகின்றதென்று வைத்துக்கொண்டால் அந்தப் பொருள் சந்தைக்கு வருவதற்கு முன்னர் அதைப்பற்றிய விளம்பரம் செய்யப்படும்.

அதிலே முதலில் அந்தத் தயாரிப்பு மற்றும் அதை தயாரித்த நிறுவனம் பற்றிய தகவல் இருக்கும். அடுத்தபடியாக அந்த நிறுவனத்தின் சர்வதேசப் பிரபல்யம் மற்றும் அந்த நிறுவனத் தயாரிப்புக்களின் விற்பனைச் சாதனை (அதிக மக்கள் வாங்கிப் பாவிக்கின்றார்கள் என்கின்ற புள்ளி விபரம்) என்கின்ற ஒப்பீட்டுத் தன்மை இருக்கும்.

அடுத்து அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பாதுகாப்பானவை, உறுதியானவை நீடித்து உழைக்கக் கூடியவை என்கின்ற அம்பலப்படுத்தும் (மற்றய தயாரிப்புக்கள் தரமற்றவை என்று மறைமுகமாக அம்பலப்படுத்தவது) தன்மை இருக்கும்.

இறுதியாக மக்களின் அபிமானத்தை பெற்ற ஒரு விளையாட்டு வீரர் அந்த செருப்பை அல்லது சப்பாத்தை பாவிப்பது போன்று காண்பிக்கப்படும். இதன் மூலம் இந்தத் தயாரிப்பு சிறந்ததாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கை அல்லது பிரமை நுகர்வோருடைய மனங்களிலே கட்டமைக்கப்படும்.

அறிக்கையிடுதல் என்பது ஒரு விளம்பரத்தில் மட்டுமல்லாமல் ஊடகத்துறை சார்ந்த அனைத்து கருத்தியல் வெளிப்பாட்டு வடிவங்களில் இந்த அடிப்படையிலே தான் மேற்கொள்ளப்படுகிறது.
பொதுவாக ஊடகத்துறையில் அறிக்கையிடுதல் என்பது இருவழித் தன்மை கொண்டதாகும்.

முதலாவது ஒரு அதிகார மையத்திலிருந்து மக்களை நோக்கி அறிக்கையிடப்படுவது. இது அதிகார மையத்தின் தேவைகளுக்காக மக்களை தயார் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பெரும்பாரும் அனைத்து ஊடகங்களினதும் 90 வீதமான செயற்பாடுகள் இந்த வகையயை அதாவது மேலிருந்து கீழ்நோக்கி கருத்தை கொண்டுசெல்லும் தன்மையைக் கொண்டவை.

அது செய்தியும் செய்திசார்ந்த வடிவங்களாக இருக்கலாம். அல்லது நாடகம் சினிமா சின்னத்திரை என்று அழகியல் சார்ந்த வடிவங்களாக இருக்கலாம். அனைத்துமே இந்த வரையறைக்கள் அடங்குகின்றன.
இரண்டாவது மக்களிடமிருந்து தகவல்களைத் திரட்டி, அதிகார மையத்தை நோக்கி அறிக்கையிடுவது. 

இது அதிகார மையத்தின் தேவைகளுக்காக மக்களை தயார்படுத்துவதற்கு மக்களிடமிருந்து தகவல்களை திரட்டி அதிகார மையத்துக்குக் கொடுப்பது. இது அநேகமாக ஒரு புலனாய்வு செயற்பாட்டுக்கு ஒப்பானது. இதற்கு சிறந்த உதாரணமாக தேர்தல் காலங்களில் ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புக்களை குறிப்பிடலாம். அதேபோல இந்திய ஊடகங்கள் நடத்தும் திரை வரிசை ரொப் ரென் போன்ற நிகழ்ச்சிகளை குறிப்பிடலாம்.

பிரதிபலிப்பை உருவாக்குதல்

ஒரு கருத்து ஒரு ஊடகத்தினூடாக ஏதாவதுதொரு வடிவத்தில் மக்களுக்கு தெரிவிக்கப்படும் போது அல்லது மக்கள் மத்தியிலே பரப்பப்படும் போது மக்களுடைய மனங்களிலே அறிதல் தெளிதல் வினையாற்றுதல் என்ற மூன்று செயற்பாடுகள் நடக்கின்றன.

உதாரணமாக காச்சல் தலைவலி என்பது உலகிலுள்ள அனைவருக்கும் வரக்கூடிய ஒரு நோயாகும். இந்த நோய்க்கு பல்வேறு பெயர்களில் மருந்துகளும் இருக்கின்றன. இந்த நோயை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கக் கூடிய மருந்தின் அடிப்படை மூலக்கூறுகள் மருத்துவ ரீதியாக ஒன்றாக இருந்தாலும்; நாட்டுக்கு நாடு இந்த மருந்துகள் அவற்றை தயாரிக்கின்ற நிறுவனங்களின் கொடுக்கப்படும் வௌ;வேறு பெயர்களில் தான் மக்களால் அறியப்படுகின்றன.

இலங்கையில் காச்சலுக்கென்று என்ற மருந்து பாவனையில் இருக்கிறதென்று வைத்துக் கொண்டால் இப்போது என்ற சிறந்த மருந்து வெளிநாடுகளில் பாவிக்கப்படுவதாகவும்; அது இலங்கையில் விற்பனைக்கு வந்துள்ள தென்றும் ஒரு செய்தி ஊடகங்களில் வரும் போது அதை கிரகிக்கும் ஒரு மனிதன் முதலில் இந்தப் புதிய மருந்து வந்திருக்கும் தகவலை அறிந்து கொள்கிறான். அதற்கு அடுத்தபடியாக அந்த தகவலூடான இந்த புதிய மருந்து வெளிநாடுகளில் பாவிக்கப்படுவதால் சிறந்த மருந்தாக இருக்கும் என்ற கருத்து (அவனுடைய அறிதலுக்கு ஊடாக) அவனுக்கு ஏற்படுகிறது. அதன் பின்னர் அந்த மருந்தை வாங்கவேண்டும் என்ற வினையாற்றும் எண்ணம் அவனுக்கு உருவாகிறது. மருத்துவர் பழைய மருந்தை கொடுத்தால் புதிய மருந்தை எழுதித் தாருங்கள் என்று கேட்கும் நிலைக்கு அவன் வருகிறான்.

இதற்கு இன்னொரு உதாரணமாக கடந்த 2005ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை செய்யப்பட்ட செய்;தியை எடுத்துக் கொள்ளலாம்.
இந்தச் செய்தி ஊடகங்கள் வாயிலாக ஐரோப்பாவில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களை எட்டிய போது அதன் மூலம் ஜோசப் பரராசசிங்கம் துப்பாக்கிச்; சூடுபட்டு இறந்துவிட்டார் என்ற தகவல் முதலில் அவர்களுக்கு தெரிகிறது.

அடுத்து அவர் எங்கே வைத்து சுடப்பட்டார்? எப்போது சுடப்பட்டார்? யார் அவரைச் சுட்டார்கள்? யார் அவரின் எதிரிகள் என்கின்ற தகவல்கள் மூலம் அவரைச் சுட்டுக் கொன்றவர்கள் தமிழின துரோகிகள் என்ற தெழிவு அல்லது புரிதல் அவர்களுக்கு ஏற்படுகிறது.

அதற்கு அடுத்த கட்டமாக இந்தப் புரிதல் தெழிதல்களுக்கூடாக இந்தப் படுகொலையைக் கண்டிக்க வேண்டும் என்ற செயலாற்றும் என்ணம் இந்தச்செய்தியைப் படிப்பவர்களுடைய மனதிலே உருவாகிறது.
இந்த செய்தி சொல்லப்பட்ட விதத்தையும் அதை உள்வாக்கிக் கொண்டவருடைய கருத்தியல் தளம் மற்றும் இருப்பையும் பொறுத்து இந்தப் படுகொலைக்கு எதிராக வினையாற்றும் செயற்பாடு அமைகின்றது.
ஓரு தீவிரமான கிறிஸ்தவருக்கு ஜேசு பாலன் பிறந்த நேரத்தில் அவரது பிறப்புக்கான ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துவிட்டதே என்ற கொதிப்பு அவரை ஆட்கொண்டிருக்கும்.
தமிழ் தேசிய உணர்வாளர் ஒருவருக்கு துயரத்துடன் கூடிய ஆத்திர உணர்வை இது தூண்டியிருக்கும.;

இதேவேளை இனவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடும் நபருக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சிதரும் ஒன்றாக இருந்திருக்கும்.
பொதுவாக ஊடகங்கள் தங்களது நோக்கம் இருப்பு மற்றும் செயற்பாடுகள் பற்றி பல்வேறு காரணங்களையும் வியாக்கியானங்களையும் கொள்கை விளக்கங்களையும் கூறினாலும் உண்மையில் மக்களின் மனங்களில் பிரதிபலிப்பை உருவாக்குவது என்பது தான் அனைத்து ஊடகங்களினதும் அடிப்படைக் குறிக்கோளாகும்.

அதாவது மக்களின் சிந்தனைத் தளத்துக்குள் ஊடுருவி அதில் செல்வாக்குச் செலுத்தி சார்புத் தன்மை ஒன்றை உருவாக்கி அவர்களை இயக்குகின்ற சக்தியாக இன்றைய நவீன ஊடகம் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது.

பொதுவாக ஊடகவியல் என்று இன்று அழைக்கப்படும் இந்தத்துறையிலுள்ள அனைத்து ஊடகங்களும் இந்த மூன்று அடிப்படை நோக்கங்களை ஆதாரமாகக் கொண்டுதான் செயற்படுகின்றன.
செய்தி சார்ந்த விடயங்களாக இருந்தாலும்,அறிவியல் சார்ந்த விடயங்களாக இருந்தாலும் அல்லது கலைத்துவம் சார்ந்த மகிழ்வூட்டும் விடயங்களாக இருந்தாலும் ஊடகங்களால் கட்டமைக்கப்படுகின்ற அனைத்து வடிவங்களுமே மனிதனுடைய சிந்தனைத் தளத்தை ஆக்கிரமிப்பதை நோக்கமாகக் கொண்டவையாகும்.

தேவைக்கான உற்பத்திஎன்பது பொருளியலிலே ஒரு முக்கியமான விடயம். அதாவது மக்களுடைய தேவையை பூர்த்தி செய்வதற்காக பொருட்களை உற்பத்தி செய்வது ஒரு வகை. உற்பத்தி செய்யப்பட்ட அல்லது செய்யப்படவுள்ள பொருட்களுக்கான தேவையை மக்கள் மத்தியில் வலிந்து உருவாக்குவது இன்னொரு வகை. இன்றைய உலகமயமாதல் சூழலில் பொருட்களுக்கான தேவையை மக்கள் மத்தியில் வலிந்து உருவாக்கும் வேலையை அதாவது மக்களை சந்தைப் பொருளாக்கும் வேலையை அனைத்து மேலாதிக்க ஊடகங்களும் செய்து வருகின்றன.

மேற்குலகின் ஜனநாயக அக்கறை, தனிமனித சுதந்திரத்தின் மீதான கரினம், மனித உரிமை செயற்பாட்டை வலியுறுத்துவதிலுள்ள அதீத ஈடுபாடு,
கருத்தியல் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதிலுள்ள ஆர்வம்இவை அனைத்தையும் கட்டுடைத்தால், பொருளாதார நலன் தான் இவற்றின் அடிப்படை என்பது தெரியவரும்.

ஊடகவியல் என்பது சந்தைப் பொருளாதார வாழ்வியலுக்காவும், அந்த சந்தைப் பொருளாதாரத்தில் ஆளுமை செலுத்துகின்ற மேலாதிக்க சக்திகளின் அரசியல் நலன்களுக்காகவும் மக்களை தயார் படுத்துகின்ற அவர்களை கருத்தியல் சிறைக்குள் தள்ளுகின்ற வேலையை செய்கின்ற முக்கியமான துறையாக மாறிவிட்டடது.

தங்களது விடுதலைக்கும், உரிமைக்கும், சமத்துவத்திற்கும் போராடுகின்ற மக்களுடைய குரலை திட்டமிட்டு நசுக்குவதிலும் கொச்சைப்படுத்துவதிலும் முன்னணியில் நிற்கும் மேலாதிக்க ஊடகங்களின் நோக்கத்தை இந்தப் பின்னணியில் வைத்துத் தான் பார்க்க வேண்டும்.

தங்களது விடுதலைக்கும், உரிமைக்கும், சமத்துவத்திற்கும் போராடுகின்ற மக்களுடைய குரலாக ஒலிக்கும் ஊடகங்கள் இந்த மேலாதிக்க ஊடகங்களின் கருத்தியல் ஆக்கிரமிப்பை தகர்த்தெறிய வேண்டும்.
தங்களுடைய தளம் எது என்பதையும் அதில் பயணிப்பதற்கான சரியான வழித்தடம் எது என்பதையும் இந்த ஊடகங்கள் சரியாக இனம் காணவேண்டும். அதாவது தங்களுக்கான ஊடகக் கருத்தியல் எது என்பதையும், தனித்துவமான வடிவம் எது என்பதையும் இந்த ஊடகங்கள் திர்மானிக்க வேண்டும்.

மாறாக இந்த மேலாதிக்க ஊடகங்களின் வழிமுறைகளும் கருத்தியல் தளமும் தான் சிறந்தது உச்சமானது என்று நினைத்தால் இவை அவற்றின் ஊது குழல்களாகவும், தரகர்களாகவும் தான் இருக்க முடியுமே அன்றி மக்களுக்கான உண்மையான ஊடகங்களாக இருக்க முடியாது.