புதன், 11 டிசம்பர், 2013

நெல்சன் மண்டேலாவின் முக்கிய குறிப்புக்களும் அரிய படங்களும்


1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் நெல்சன் மண்டேலா பிறந்தார்.


1941 ஆம் ஆண்டு ஜொகனஸ்பேர்க்கிற்கு சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வியை கற்றார்.


1958 ஆம் ஆண்டு மண்டேலா வின்னி மடிகி லேனா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.


1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்தார்.


1948 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் ஆட்சியைப் பொறுப்பேற்றார்.


1956 இல் தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த அரசுக்கு எதிராக புரட்சியை மேற்கொண்டார்.


1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 மேலதிகமான தோழர்களும் தென்னாபிரிக்க அரசால் கைது செய்யப்பட்டனர்.


1961 ஆம் ஆண்டு மண்டேலா உட்பட அவரது தோழர்கள் அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.




1961 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படைத் தலைவராக மண்டேலா உருவெடுத்தார்.


1961 டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.


1962 ஆம் ஆண்டு மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார்.


1988 ஆம் ஆண்டு கடுமையான காச நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் எல்லைக்கே சென்றார் மண்டேலா.






1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தபடியே அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.


இதேவேளை, சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு நெல்சன் மண்டேலாவுக்கு 'நேரு சமாதான விருது' வழங்கியது.




1961 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படைத் தலைவராக மண்டேலா உருவெடுத்தார்.


1961 டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.



1961 ஆம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார்.




1962 ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி மண்டேலா காவல்துறையினரால்சுற்றிவளைக்கப்பட்டு கைதானார். தென்னாபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.


1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி மண்டேலாவுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.




1962 ஆம் ஆண்டு மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார்.




1990 ஆண்டில் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருது மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது.


1993 இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது.


மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை மாதம் 18ஆம் திகதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது.


1994 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி அவர் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியானார்.


1998 ஆம் ஆண்டு முதல் தென்னாபிரிக்கப் பாடசாலைகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.


1999 ஆம் ஆண்டு முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன் பின் பதவியை விட்டு விலகினார்.


2013 ஜூன் மாதம் 8 ஆம் திகதி மண்டேலா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


2013 ஜூன் 23ஆம் திகதி அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதென தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமோவின் அலுவலகம் அறிவித்தது.


தனது வீட்டில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த மண்டேலா, 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வியாழக்கிழமை தனது 95ஆவது வயதில் காலமானார்.